கன மழை பெய்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கன மழை பெய்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பள்ளிபாளையத்தில் மாலை நேரத்தில் பெய்த கன மழை பெய்தது
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை நேரங்களில் பலத்த மழையானது கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் பள்ளிபாளையத்தில் இன்று மாலை வேளையில் சங்ககிரி சாலை, ஈரோடு சாலை, நாமக்கல் பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் பள்ளிக், கல்லூரி முடியும் நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்ததால், மாணவ, மாணவியர் தவிப்புக்கு உள்ளாகினர். மேலும் தொலைதூரப் பயணம் மேற்கொள்வோர், இருசக்கர வாகனத்தில் செல்வோர் சாலையோரங்களில், உள்ள டீக்கடை உணவகங்களில், மழையின் காரணமாக ஒதுங்கினர். சாலைகள் எதிர்வரும் வாகனங்கள் , தெரியாததால் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாரே சென்றது. இடைவிடாது பெய்த மழையின் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சீதோசன நிலை காணப்பட்டது.
Next Story