மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்,அரசு மரியாதையுடன் அடக்கம்
Sangagiri King 24x7 |8 Aug 2024 1:55 PM GMT
சங்ககிரி :மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்,அரசு மரியாதையுடன் அடக்கம்....
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் மேற்கு கிராமம் வேங்கிபாளையம் சென்னாயக்கன்காடு பகுதி சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி பழனிச்சாமி, அனிதா தம்பதியினர். இவர்களது மகன் கவின் (21), டெக்ஸ்டைல் டிப்ளமோ படித்துவிட்டு நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கவினுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவின் மூலச்சாவு அடைந்தார். அதனையடுத்து பெற்றோர்கள் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட கவின் உடலானது சென்னாயக்கன்காடு பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சங்ககிரி வட்டாட்சியர் வாசுகி தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு கவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது மோரூர் மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாமோகன்ராஜ் வருவாய் ஆய்வாளர் மலர், உட்பட அரசு அதிகாரிகள் பலரும் மரியாதை செலுத்தினர்.
Next Story