கெங்கவல்லி அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து

கெங்கவல்லி அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து
வழக்குப்பதிவு
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். அதேபகுதியை சேர்ந்தவர் மருதமுத்து(வயது 72). விவசாயிகள். இவர்களுக்கு நிலத்தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் கணேசன் மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோர் மருதமுத்துவிடம் தகராறு செய்தனர். அப்போது அவர்கள் மருதமுத்துவை கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதை தட்டிக்கேட்ட மருதமுத்துவின் மகன் வேல்முருகன், அவரது மனைவி சங்கீதா ஆகியோரையும் அவர்கள் இரும்பு கம்பியால் தாக்கினர். இதுதொடர்பாக இரு தரப்பினரும் கெங்கவல்லி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் கணேசன், கார்த்திக், வேல்முருகன், சங்கீதா ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story