ராமநாதபுரம் தமிழர் தேசம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |8 Aug 2024 2:02 PM GMT
ராமநாதபுரம் தமிழ் தேசம்கட்சியினர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் வருகின்ற 12ஆம் தேதி அதிமுக நிர்வாகி கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
ராமநாதபுரம் பட்டினம்காத்தான் அருகே தனியார் மஹாலில் தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே. கே. செல்வகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜி. தமிழ்வேந்தன் ,மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ் ,மாநில ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன் ,மாநில செயலாளர் வி.எம்.எஸ். அழகர் ,மாநில மீனவர் அணி செயலாளர் ஆர்.டி செல்வம், கைது குணசேகரன் ,மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாண்டியம்மாள் ஆகியோர்கள் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பூர்வீக மீனவர்களை இழிவாக பேசிய ஆர்.பி உதயகுமார் அதிமுக அவர்களைக் கண்டித்தும் ,தமிழ் தேசம் கட்சியின் நிர்வாகிகளை கொலை செய்ய முயற்சி செய்யும் நபர்களை கைது செய்யாமல் மெத்தனமாக செயல்படும் காவல்துறையை கண்டித்தும் வருகின்ற 12.8.2024 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story