கொட்டி தீர்த்த கனமழை அவதி அடைந்த வாகன ஓட்டிகள்....

கொட்டி தீர்த்த கனமழை அவதி அடைந்த வாகன ஓட்டிகள்....
சங்ககிரி: தேவூர் அரசிளாமணி பகுதிகளில் கனமழை வாகன ஓட்டிகள் கடும் அவதி....
சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென இரவு நேரங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக லேசான காற்று வீசியதை தொடர்ந்து இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேவூர், அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, ஒடச்சக்கரை பாரதி நகர், பழக்காரன்காடு வட்ராம்பாளையம், மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளிலும் விவசாய வயல்வெளிகளிலும் மழைநீர் தேங்கி நின்றாதோடு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் திடீரென பெய்த கனமழையால் அப்ப பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலவி வருகிறது. மேலும் சங்ககிரி மற்றும் அரசிராமணி சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் 50 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story