மத்திய அரசின் ஓவிய பயிற்சி முகாம்

மத்திய அரசின் ஓவிய பயிற்சி முகாம்
முகாம்
கள்ளக்குறிச்சி விருக்ஷா கைவினை தொழில் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் ஓவிய பயிற்சி முகாம் துவங்கியது. கள்ளக்குறிச்சி அண்ணாநகர் விருக்ஷா கைவினை தொழில் கூட்டமைப்பு கட்டடத்தில் மத்திய அரசின் சீட்டிவிசன் இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் நிதி உதவியுடன் திருக்கோவிலுார் டான் இன்ஸ்டியூட் ஆப் ரூரல் டெவலப்மென்ட் இணைந்து நடத்துகின்ற இரண்டு நாள் ஓவிய பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. கள்ளக்குறிச்சி நகரமன்ற தலைவர் சுப்புராயலு தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி துவக்கினார். திருக்கோவிலுார் டான் இன்ஸ்டியூட் பார் ரூரல் டெவலப்மென்ட் நிர்வாக இயக்குனர் சுந்தர் மற்றும் மாநில விருது பெற்ற சிற்பி சக்திவேல் இதற்கான பயிற்சியை அளிக்கின்றனர். சின்னசேலம் அருகே ஸ்கூட்டி மீது கார் மோதி படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடி ரோடு பகுதியைச் சேர்ந்த தியாகராஜன்,63; இவர் நேற்று முன்தினம் பகல் 2.30 மணிக்கு தனது ஸ்கூட்டி வாகனத்துடன் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏ.கே.ஆர்., கடையின் அருகே சாலையோரம் நின்றிருந்தார். அப்போது பின்னாள் வந்த இனோவா கார், ஸ்கூட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தியாகராஜனை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் இனோவா கார் டிரைவர் உசலம்பட்டி சேர்ந்த முத்தையா மகன் ரமேஷ்,35; மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story