மக்களுடன் முதல்வர் திட்டம் முகமை தொடங்கி வைத்த அமைச்சர்!
Pudukkottai King 24x7 |9 Aug 2024 5:48 AM GMT
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்யை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் தொடங்கி வைத்தார். முன்னதாக அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்புகள் அளிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.இதில் வீட்டு மனை பட்டா, இலவச வீடு, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் இணைப்பு, புதிய மின் இணைப்பு, மின்சாரத்தில் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பொதுமக்கள் மனு அளித்து 7 நாள் முதல் ஒரு மாதத்திற்குள் நிவாரணம் பெறலாம் என தெரிவித்தார்.
Next Story