ரயில்வேகேட் அருகே மேம்பாலம் உயர்மின் கோபுரம்!
Pudukkottai King 24x7 |9 Aug 2024 5:50 AM GMT
பொது பிரச்சனைகள்
புதுக்கோட்டை திருச்சி சாலையில் கருவேப்பில்லையான் கேட் என்ற இடத்தில் ரயில்வே பாதை உள்ளது. இதன் வழியே நாளொன்றுக்கு 28 ரயில்கள் சென்று வருகின்றன. ஒரு ரயில் கடப்பதற்கு 20 நிமிடங்கள் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் உயர்மின் கோபுர விளக்கு இல்லாததால் ஒரே இருட்டாக இருக்கிறது. ஆகவே இங்கு உயர் மட்ட பாலம், உயர் மின் கோபுர விளக்கு அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story