சிவனுடன் அருள் பாலித்த சக்தி மாரியம்மன்
Sangagiri King 24x7 |9 Aug 2024 5:59 AM GMT
சங்ககிரி: ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிவலிங்கத்தை கையில் ஏந்தியவாறு பக்தர்களுக்கு அருள் பாலித்த சக்தி மாரியம்மன்....
சேலம் மாவட்டம் சங்ககிரி வி. என். பாளையம்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி பால்,தயிர்,சந்தனம், திருமஞ்சனம்,பன்னீர்,இளநீர், குங்குமம்,திருநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருளைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. அப்போது மாரியம்மன் சிவலிங்கத்தை அருகில் வைத்து கையில் பிடித்தவாறு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு சக்தி மாரியம்மனை வழிபட்டுச் சென்றனர்.
Next Story