தேனூரில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா!
Pudukkottai King 24x7 |9 Aug 2024 6:08 AM GMT
பக்தி
பொன்னமராவதி அருகே உள்ள தேனூரில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி, செம்பூதியில் புரவிகளின் சிலைகள் புதன்கிழமை வடிவமைக்கப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக தேனூர் எடுத்துவரப்பட்டு ஊரின் மையப்பகுதியில் புரவிகளின் சிலைகள் வைக்கப்பட்டன. இதையடுத்து புரவிகள் மற்றும் மதலை சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, பொதுமக்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலுக்குவைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.விழாவில் சுற்றுவட்டா கிராமங்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டன.
Next Story