நெடுஞ்சாலைத்துறை நிறைய கண்டித்து பாமகவினர் போராட்டம்

ஜனப்பன் சத்திரத்தில் சாலையை போடு பள்ளத்தை மூடு போராட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர்
ஜனப்பன் சத்திரத்தில் சாலையை போடு பள்ளத்தை மூடு போராட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் திருவள்ளூர் மாவட்டம் ஜனப்பன் சத்திரம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சாலைகளில் ஆங்காங்கே பெரிய பள்ளம் அமைந்துள்ளதால் கனரக வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் செல்லும் போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும் இது குறித்து பலமுறை சாலையை சீரமைக்க கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் சாலையை சீரமைக்க கோரி சாலையில் உள்ள பள்ளத்தை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்த அங்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் சமரசத்தில் ஈடுபட்டனர் அப்போது சாலையை சீரமைக்காவிட்டால் மறியல்போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து பின்னர் மறியலில் ஈடுபட்டததை தொடர்ந்து தேசியநெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அவர்களிடம் சமரசம் மேற்கொண்டு பள்ளத்தை மூடி சாலையை உடனடியாக அமைப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story