புறவழிச்சாலையில் கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது
Komarapalayam King 24x7 |9 Aug 2024 8:32 AM GMT
குமாரபாளையம் அருகே புறவழிச்சாலையில் கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே புறவழிச்சாலையில் கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. திருப்பூர் கே.பி.என். காலனியை சேர்ந்தவர் சாந்தி. இவருக்கு சொந்தமான ஹோண்டா ஐ 20 காரில் இவரது கணவர் முரளிதரன், 55, மற்றும் சுமார் 25 வயது கொண்ட மகன் ஆகிய இருவரும் சேலத்திலிருந்து திருப்பூர் நோக்கி வந்ததாக கூறப்படுகிறது. குமாரபாளையம் கத்தேரி பஸ் நிறுத்தம் அருகே நேற்று இரவு 09:15 மணியளவில் வந்த போது, காரின் முன் பகுதியில் புகை வந்ததால், காரை விட்டு கீழே இறங்கி, பேனட் திறந்து பார்த்த போது திடீரென்று கார் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து குமாரபாளையம் தீயணைப்பு படையிருக்கு தகவல் தர, நேரில் வந்து தீயை அணைத்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story