பூலாம்பட்டி காவேரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து மீண்டும் துவக்கம்.

பூலாம்பட்டி காவேரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து மீண்டும் துவக்கம்.
15 நாட்களுக்குப் பிறகு சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவேரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டது
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவேரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்  நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு போக்குவரத்து தற்போது மீண்டும் துவங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி... சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து கடந்த வாரம் உபரி நீர் திறக்கப்பட்டதால் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது .. இதனால் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவேரி ஆற்றில் இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது சீரான தண்ணீர் செல்வதால் விசைப்படகு இயக்க அனுமதி கொடுத்து மீண்டும் விசைப்படகு போக்குவரத்து துவங்கப்பட்டது இதனால் சுற்றுலா பயணிகளும், தினந்தோறும் காவேரி ஆற்றை கடந்து செல்லும் வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...
Next Story