இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
Pudukkottai King 24x7 |10 Aug 2024 4:38 AM GMT
போராட்டச் செய்திகள்
புதுக்கோட்டை மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டையில் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 62 பேர் கைது செய்யப்பட்டனர். மூன்று சட்டங்களின் நகல்களை எரிக்கும் போராட்டத்தை மாநிலம் முழுவதும் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருந்தது. இதன்படி, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற போராட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் த.செங்கோடன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலர்கள் கே.ஆர்.தர்மராஜன், ஏ. ராஜேந்திரன், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு. மாதவன், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்டச் செயலர் ஆர். இந்திராணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மூன்று சட்டங்களின் நகல்களை அக்கட்சியினர் கொளுத்தினர். இதைத் தொடர்ந்து 6 பெண்கள் உள்பட 62 பேரை போலீஸார் கைது செய்தனர்.தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Next Story