சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்!

சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்!
நிகழ்வுகள்
புதுக்கோட்டை சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த பெண்ணின் உறுப்புகளை உறவினர்கள் தானம் அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் செட்டியாப்பட்டியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி மனைவி மாரிக்கண்ணு (46). இவர், கடந்த ஆக. 7ஆம் தேதி நார்த்தாமலை அருகே சாலை விபத்தில் காயமடைந்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வியாழக்கிழமை மூளைச்சாவு ஏற்பட்டது. அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்யஉறவினர்கள் முன்வந்தனர். இதைத் தொடர்ந்து நுரையீரல், கல்லீரல், இரு சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவை வெள்ளிக்கிழமை அதிகாலை தானமாக பெறப்பட்டு, ஏற்கெனவே உடலுறுப்பு தானம் பெறப் பதிவு செய்திருந்தோரின் பதிவு மூப்புப் பட்டியலின்படி, இரு சிறுநீரகங்களும் தஞ்சை மற்றும் மதுரைக்கும், கண்கள் மற்றும் கல்லீரல் மதுரைக்கும், நுரையீரல் சென்னைக்கும் முறையான பாதுகாப்பு முறைப்படி அனுப்பிவைக்கப்பட்டன.முன்னதாக, சாலை விபத்தில் இறந்து 6 பேரின் உயிர்வாழ்வுக்காக உடலுறுப்புகளை தானம் தந்த மாரிக்கண்ணுவின் உடலுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ) ஜி.ஏ. ராஜ்மோகன், கண்காணிப்பாளர் வி. தையல்நாயகி, இருக்கை மருத்துவ அலுவலர் ஏ. இந்திராணி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். தொடர்ந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
Next Story