அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டி போட்டிகள் துவக்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டி போட்டிகள் துவக்கம்
துவக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் துவங்கியது. திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் ஆகிய 5 குறுவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், 14, 17 மற்றும் 19 வயதுடைய மாணவ, மாணவிகளுக்கு கேரம், வாலிபால், கபடி, கோ-கோ, குண்டு எறிதல் உட்பட 15 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது. செஸ் விளையாட்டில் மட்டும் 11 வயதுடைய மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை இம்மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்பர்.
Next Story