அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ சிவன் பார்வதி திருக்கல்யாண வைபவம்

காரனோடை ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ சிவன் பார்வதி திருக்கல்யாண வைபவம்
காரனோடை ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ சிவன் பார்வதி திருக்கல்யாண வைபவம் சோழவரம் ஒன்றியம் காரனோடை அருகே உள்ள ஆத்தூர் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரியம்மன் திருக்கோயிலில்தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ சிவன் பார்வதி திருக்கல்யாண வைபவம் ஆலய தலைவர் ஆலய உறுப்பினர் வி.ஏ.செல்வம் தலைமையில், ஆலய இளைஞர் குழு தலைவர் எஸ். வீரபத்திரன் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ சிவன் பார்வதி உற்சவர் சீர்வரிசை தட்டுக்களுடன் வாத்தியங்கள் முழங்க ஆலயத்திற்கு வருகை தந்து, வேத மந்திரங்கள் ஓதி யாகசாலை பூஜைகளுடன் ஸ்ரீ சிவன் பார்வதி திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தில் அர்ச்சனை தூவி சுவாமி தரிசனம் பெற்றனர் இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று தீப ஆராதனை காட்டப்பட்டது. இவ்விழாவில் செங்குன்றம் சிவசங்கரி ரைஸ் மில் அரிசி மண்டி உரிமையாளர் பி.எஸ்.சத்தியமூர்த்தி என்கிற பாண்டியன் குணசுந்தரி குடும்பத்தினர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்து பக்தர்களுக்கு அறுசுவை உணவினை வழங்கினார்கள். மேலும் நிகழ்ச்சியில் ஆலய குழு நிர்வாகிகள், ஆலய குழு இளைஞர்கள் பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story