கறம்பக்குடி முன்னாள் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்!
Pudukkottai King 24x7 |10 Aug 2024 8:36 AM GMT
குற்றச்செய்திகள்
கறம்பக்குடி 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் சின்னத்துரை உயிரிழந்தார். அவரது மனைவி லட்சுமி அளித்த புகார் பேரில் அப்போதைய கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு வழக்கு பதிவு செய்து விசாரித்தார். இவ்வழக்கு விசாரணை கறம்பக்குடி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை சமன் அனுப்பியும் சகாயம் அன்பரசு ஆஜராகவில்லை. ஆகவே அவருக்கு பிடிவாரண்ட் அளித்து நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.
Next Story