வீடு கட்டும் பணி ஆணைகளை எம்எல்ஏ வழங்கினார்

வீடுகள் இல்லாத ஏழைகளுக்கு வீடுகள் வழங்கும் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் 45 பயனாளிகளுக்கு வீடுகட்டும் பணி ஆணைகளை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் வழங்கினார்
வீடுகள் இல்லாத ஏழைகளுக்கு வீடுகள் வழங்கும் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் 45 பயனாளிகளுக்கு வீடுகட்டும் பணி ஆணைகளை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் காரனோடை ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று 8 ஊராட்சிகளை சேர்ந்த வீடுகள் இல்லாத ஏழைகளுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் 45 பயனாளிகளுக்கு தலா 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வீடு கட்டும் ஆணைகளை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தொடங்கி வைத்து வழங்கினார் மேலும் அரசின் தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதை சீரமைக்கும் வகையில் 11 பேருக்கு தலா 60 ஆயிரம் ரூபாய் வழங்கும் ஆணை அளிக்கப்பட்டது இதில் ஒன்றிய குழு துணை தலைவர் மீ வே கர்ணாகரன் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடன் இருந்தனர்
Next Story