நடந்து சென்றவர் மீது கார் மோதியதில் முதியவர் பலத்த காயம்
Komarapalayam King 24x7 |10 Aug 2024 1:25 PM GMT
குமாரபாளையம் அருகே நடந்து சென்றவர் மீது கார் மோதியதில் முதியவர் பலத்த காயமடைந்தார்
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சானார்பாளையம் பகுதியில் வசிப்பவர் செங்கோடன், 84, விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு 07:30 மணியளவில், சானார்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் மாத்திரை வங்கி கொண்டு பள்ளிபாளையம் சாலையை நடந்து கடந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மாருதி 800 கார் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இவர் கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் குமாரபாளையம் அருகே செங்குட்டைபாளையத்தை சேர்ந்த செல்வராஜ், 50, என்பவரிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story