புதிய சாலை பணிகள் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு !

சங்ககிரி:புதிய சாலை பணிகள் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு....
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி, சங்ககிரி பகுதிகளில் புதிதாக போட்டப்பட்ட சாலைகளை சேலம் மாநில நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. சேலம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் சங்ககிரி ஆர்.எஸ்.அரசிராமணி மூலப்பாதை, உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட சாலைகளின் தரம், அகலம் ஆகியவற்றையும் மேலும் அவர் மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலங்கள், சிறு பாலங்கள் அருகேயுள்ள பகுதிகளில் மண் சரிவுகள், முட்புதர்கள், அடைப்புகளை சரி செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின்னர் சங்ககிரி மோடி காடு பகுதியில் பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அப்போது எடப்பாடி கோட்டப்பொறியாளர் சண்முகசுந்தரம், உதவி கோட்டபொறியாளர் சுதா, உதவி பொறியாளர் கீர்த்தி உள்ளிட்ட பலரும் ஆய்வின் போது உடனிருந்தனர்.
Next Story