புகையிலை பொருள் விற்றவர்கள் கைது!
Pudukkottai King 24x7 |11 Aug 2024 3:59 AM GMT
குற்றச் செய்திகள்
கீரனுார், உடையாளிப்பட்டி போலீசார் பாப்புடையான்பட்டியில் ரோந்துப்பணி மேற்கொண்டபோது சதாம் உசேன் என்பவர் கடையில் சோதனை நடத்தியதில் அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள், 10 கிலோ பான் மசாலா, ஹான்ஸ் குட்கா உள்ளிட்ட பொருட்கள் கைப்பற் றப்பட்டன. மேலும் அவரிடம் இருந்து செல்போன் மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்த சப்இன்ஸ் பெக்டர் கூத்தபெருமாள் மற்றும் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கீரனுார் சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் புலியூர் பகுதியில் சோதனை செய்தபோது ராஜா என்பவரது கடையில் 42 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் ஒடுகன்பட்டியில் சையது அப்பாஸ் மளிகை கடையிலிருந்து 1 கிலோ புகையிலை பொருட்களும், பழனியாண்டி மளிகை கடையில் அரை கிலோ புகையிலைப் பொருட்களையும் கீரனுார் போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
Next Story