உயிர் பலி தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

உயிர் பலி தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ஊர்வலம்
பூட்டையில் சங்கராபுரம் வள்ளலார் மன்றம் சார்பில் உயிர் பலி தடுப்பு சன்மார்க்க விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு, வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், அரிமா மாவட்ட தலைவர் வேலு முன்னிலை வகித்தனர். மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார். திருமுறை வகுப்பு அமைப்பாளர் ராமதாஸ் சன்மார்க்க கொடியேற்றினார். அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் சவுந்தர்ராஜன் நீர் மோர் வழங்கினார். ஊர்வலத்தை பூட்டை முன்னாள் ஊராட்சி தலைவர் கந்தசாமி தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் உயிர் பலியிடுவதை தடுக்க வலியுறுத்தி முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர். ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி, பிரகாஷ், ராஜா, சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story