கிணற்றில் ஆண் உடல் போலீஸ் விசாரணை

கிணற்றில் ஆண் உடல் போலீஸ் விசாரணை
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியத்தில் கிணற்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ரிஷிவந்தியத்தைச் சேர்ந்தவர் சத்ருகன். இவரது விளைநில கிணற்றில் ஆண் உடல் மிதப்பதாக தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கமலஹாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, 30 அடி ஆழ கிணற்றில் மிதந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை மீட்டனர். இறந்த நபர் யார் என்பது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story