புதிய வழித்தட பேருந்துகள் இயக்கம்

புதிய வழித்தட பேருந்துகள் இயக்கம்
இயக்கம்
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன், இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை,கள்ளக்குறிச்சி பனிமனை சார்பில் 1. 177 கள்ளக்குறிச்சி - கிளாம்பாக்கம் (சென்னை) 2. 31 கள்ளக்குறிச்சி - தாவடிப்பட்டு, 3. T12,B கள்ளக்குறிச்சி - அடரி ஆகிய மூன்று வழித்தடத்திற்கு, புதிய பேருந்துகளை கொடியசைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள். இந்த நிகழ்வில் தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள்,ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர்,ஒன்றிய,நகர, பேரூர் பெரும் தலைவர்கள், துணைத் தலைவர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள்,அரசு போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் என் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
Next Story