சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது

சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
கரேத்தா போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் கடந்த வாரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான இரண்டாவது மாபெரும் கரேத்தா போட்டியில் ஃபுல் காண்டாக்ட் பிரிவில் தமிழ்நாடு தலைமை பயிற்சியாளர் சென்சாய்க்கு கே.பாலகிருஷ்ணன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தமிழ்நாடு முழுவதும் இருந்து இந்தியா சார்பாக அங்கு நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டனர் . இதில் பல்வேறு எடை பிரிவுகளில் மற்றும் வயது பிரிவுகளிலும் ஏராளமானோர் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளையும், பதக்கங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி, பள்ளிபாளையம் புதன் சந்தை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது . இதில் பள்ளிபாளையம் நகர் மன்ற தலைவர் மோ.செல்வராஜ் துணைத்தலைவர் ப.பாலமுருகன், திமுக நகரச் செயலாளர் அ.குமார் தொழிலதிபர் நடராஜன் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
Next Story