பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
பள்ளிபாளையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலை அக்ரஹாரம் பகுதியில் தனியார் மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி சார்பில் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது . இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமை தாங்கினார் . மாவட்ட தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ,தொகுதி தலைவர், செயலாளரை தேர்ந்தெடுப்பது குறித்தும் ,புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் ,நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் கே.உமா சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் பழனியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேசன், கலை இலக்கிய செயலாளர் ஆர்.சி.முருகேசன் , வழக்கறிஞர் மகாலிங்கம்,ராஜா என்கிற ராஜசேகர் ராஜேந்திரன், சின்னதுரை, செந்தில்நாதன் , காளிதாஸ், மெக்கானிக் ராஜா,ஒன்றிய நிர்வாகிகள் ஜெயமுருகன், மூர்த்தி, அண்ணாமலை, மகாராஜா, பழனிச்சாமி, மற்றும் குமாரபாளையம் பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நகர, ஒன்றிய, பேரூர் பகுதிகளை சேர்ந்த செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள்,ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இதில் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story