இயற்கை உபாதைக்கு சென்றவர் சாவு போலீஸ் விசாரணை

இயற்கை உபாதைக்கு சென்றவர் சாவு போலீஸ் விசாரணை
விசாரணை
மணலுார்பேட்டை அடுத்த கடுவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் மகன் விஜய், 32 ; இவரது மனைவி நதியா, 25; திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நேற்று முன்தினம் ஜம்படை கிராமத்தில் உள்ள நதியாவின் தாய் வீட்டில் குலதெய்வ வழிபாட்டிற்காக விஜய் சென்றிருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக விஜய் வெளியில் சென்றார். இந்நிலையில், நேற்று 6:30 மணி அளவில் ஜம்படை பஸ் நிறுத்தம் அருகே உள்ள கால்வாயில் நீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது மனைவி நதியா கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விஜய் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story