இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்பு தானம்.

இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்பு தானம்.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டிவலசு, காந்திநகர் பகுதியை சேர்ந்த கண்ணனின் மகன் மோகித் குமார்(15)
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டி வலசு பகுதியைச் சேர்ந்த கண்ணன் இவருக்கு மோகித் குமார் (19) என்ற மகனும் (13) வயதில் ஒரு மகளும் உள்ளனர். மோகித் குமார் தனது நண்பர் விக்ரமுடன் கடந்த 8ஆம் தேதி சேலம் மெயின் ரோடு வெள்ளாண்டி வலசு, காந்தி சிலை பகுதி சாலையில் டூவீலரில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகன மோதியதில் மோஹித் குமார் படுகாயம் அடைந்தார். பின்னர் உடனடியாக எடப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி மோகித் குமார் முளைச்சல் ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவர்கள் அறிவுரைப்படி மோஹித் குமாரின் உடல் உறுப்புகள் தானம் செய்ய அவரது பெற்றோர் முன் வந்தனர். பின்னர் நேற்று மாலை மோகித் குமாரின் சடலம் எடப்பாடி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது முன்னதாக மோகித் குமாரின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கும் நிகழ்வாக எடப்பாடி நகர மன்ற தலைவர் பாஷா மற்றும் எடப்பாடி வட்டாட்சியர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Next Story