உதயமானது புதுக்கோட்டை மாநகராட்சி!
Pudukkottai King 24x7 |12 Aug 2024 7:51 AM GMT
அரசு செய்திகள்
புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான உத்தரவு ஆணையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். புதுகை நகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பெருநகரங்களுக்கு இணையான சாலை, குடிநீர், பாதாள சாக்கடை வசதிகளை செய்ய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதுக்கோட்டை முதல் பெண் மேயரான திலகவதி செந்திலும், முதல் துணை மேயரான லியாகத் அலியும் ஆணையினை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் பெற்றுக் கொண்டனர்.
Next Story