வடக்குமணமேல்குடியில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

விளையாட்டு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி தாலுகா மணமேல்குடியில் அமர்ந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் சுயம்பு முத்துமாரியம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.இதில் பெரிய மாடு பிரிவில் எட்டு ஜோடிகளும் சிறிய மாடு பிரிவில் 13 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன இதில் ராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை தேனி தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டியின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர் இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் கேடயம் குத்துவிளக்கு ஏர் கலப்பை போன்றவை பரிசாக வழங்கப்பட்டது இதை கண்டு களிக்க சாலையில் இருபுறமும் பந்தய ரசிகர்கள் கண்டுகளித்தனர் பாதுகாப்பு பணியை மணமேல்குடி காவல் துறையினர் மேற்கொண்டனர்
Next Story