தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர், வாகன ஓட்டிகள் அவதி
Maduranthakam King 24x7 |12 Aug 2024 9:22 AM GMT
அதிகாலை பெய்த கனமழை காரணமாக மேல்மருவத்தூர் அருகே இரட்டை ஏரி நிரம்பி தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் இதனால் வாகன ஓட்டிகள் அவதி
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு நீர் நிலைகள் நிறைந்துள்ளது... இன்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக மேல்மருவத்தூர் அருகே சிறு நாகலூர் இரட்டை ஏரி நிரம்பி தண்ணீர் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் வழிந்து ஓடுகிறது.. இதனால் சென்னை செல்லக்கூடிய வாகனங்கள் இப்பகுதியில் ஊர்ந்து செல்கின்றன. இதனால் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனம் அணிவகுத்து நிற்கின்றன ..இதனை வாகன நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. மேலும் தண்ணீரை சாலையில் வராமல் கரையை உடைத்து வெளியேற்ற ஆய்வு மேற்கொண்டு தண்ணீரை வேறு பாதையில் வெளியேற்றி வருகின்றனர்.
Next Story