விவசாய தோட்டத்தில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு.. போலீசார் விசாரணை!
Sangagiri King 24x7 |12 Aug 2024 4:09 PM GMT
சங்ககிரி:விவசாய தோட்டத்தில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு.. சங்ககிரி போலீசார் விசாரணை...
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே விவசாயத் தோட்டத்தில் அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை சங்ககிரி போலீசார் மீட்டெடுத்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு.... சங்ககிரியை அடுத்து மங்கரங்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே கருமந்துறை பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதாக சங்ககிரி காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் விரைந்து வந்த சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளர் ரஜினி சம்பவ இடத்தை பார்வையிட்டு அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? இவர் விவசாயத் தோட்டத்தில் தானாக மயங்கி விழுந்து இறந்தார? அல்லது கொலை செய்து வீசிவிட்டு செய்தார்களா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story