எடப்பாடி அருகே ஆடு திருடிய இரண்டு பேர் கைது

எடப்பாடி அருகே ஆடு திருடிய இரண்டு பேர் கைது
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே தான குட்டை வளவு பகுதியில்
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் தானகுட்டை வளவு பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி விவசாயி இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார் தினந்தோறும் மேச்சலுக்காக ஆடுகளை ஓட்டி சென்று விட்டு பட்டியில் அடைப்பது வழக்கம், நேற்று முன்தினம் நள்ளிரவு பட்டில் இருந்த ஆடுகள் அலறல் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு தமிழரசி வந்து பார்த்தபோது இரண்டு பேர் ஆட்டுப்பட்டியில் இருந்ததைப் பார்த்த அதிர்ச்சியில் சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களின் உதவியுடன் இரண்டு இளைஞர்களை சுற்றி வளைத்து பிடித்து கொங்கணாபுரம் போலீஸ் சாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் இளம்பிள்ளை தப்பகுட்டையைச் சேர்ந்த தங்கவேல் மகன் சதீஷ்குமார்(27)அவரது நண்பர் மோகன் (24) என்பதும் இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலைமையில் உள்ளது தெரிய வந்தது.மேலும் நள்ளிரவில் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை திருடி ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது இதை அடுத்து கொங்கணாபுரம் போலீசார் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story