மதுராந்தகம் அருகே இரு கோயில்களில் உண்டியல் பணம், நகை,பூஜை பொருட்கள் கொள்ளை
Maduranthakam King 24x7 |13 Aug 2024 4:19 AM GMT
மதுராந்தகம் அருகே இரு கோயில்களில் உண்டியல் பணம், நகை,பூஜை பொருட்கள் கொள்ளை
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள அபிராமிபுரம் என்ற இடத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழா முடிந்து சில நாட்கள் ஆன நிலையில் நேற்று இரவு இந்த கோவிலின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த அம்மன் தாலி பொட்டு இரண்டு சவரன்,உண்டியல் பணம் 20 ஆயிரம் கொள்ளை போய் உள்ளது..இந்த கொள்ளை சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கிராமத்திற்கு அருகில் உள்ள கூடலூர் கிராமத்தில் உள்ள பூவிழிஅம்மன் கோவிலிலும் உண்டியல் உடைத்து அதிலிருந்த சுமார் 10,000 ரூபாய் கோவில் பூட்டை உடைத்து கோவிலில் இருந்த பூஜை பொருட்கள் கொள்ளையடிக்கபட்டுள்ளது..இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story