போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு
சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் எதிரே போதைப்பொருள் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி சுகாதாரத் துறையின் சார்பில் பஸ் நிலையம் எதிரே போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நகர மன்ற தலைவர் பாஷா தலைமையில் ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் வைத்தியலிங்கம், நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, சுகாதார அலுவலர் முருகன், துணை தாசில்தார் சிவராஜ், திமுக நகர நிர்வாகிகள் மாதையன், வடிவேலு, சாமியப்பன்,செந்தில்குமார், சிங்காரவேலு,செல்வகுமார், ராஜமாணிக்கம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் துப்புரவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story