அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அன்று நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். குமாரபாளையம் எஸ்.ஐ.-க்கள் பழனிசாமி, மாதேஸ் வரன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, போதைப்பழக்கத்தின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு உரையாற்றினர். பேராசிரியர்கள் ரகுபதி, சரவனாதேவி, ஞானதீபன், கலாவதி, அனுராதா, பத்மாவதி உள்பட பலர் பங்கேற்றனர். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் கணிதத்துறைத்தலைவருமான ரமேஷ்குமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
Next Story