கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு: நிவாரண நிதி
Maduranthakam King 24x7 |13 Aug 2024 10:19 AM GMT
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதி அச்சிறுப்பாக்கம் கோயில் நகர அரிமா சங்கம் வழங்கினர்.
செங்கல்பட்டு மாவட்டம்,அச்சிறுப்பாக்கம் கோயில் நகர அரிமா சங்கம் சார்பில் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி உதவி வழங்கினர். வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்திலிருந்து அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் நிவாரணம் மற்றும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அச்சிறுப்பாக்கம் கோயில் நகர அரிமா சங்கம் சார்பில் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி ரூபாய் 50,000. வரைவேலையை வழங்கினர். இந்நிகழ்வில் தலைவர் துக்காராம், செயலாளர் மின்னல்மூர்த்தி, பொருளாளர் அசோக் உட்பட அரிமா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story