கரேத்தா போட்டியில் மானவ மாணவியருக்கு பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர்

பள்ளிபாளையத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான காரேத்தா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி பரிசுகளை வழங்கி பாராட்டினார்
பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலை கணபதிபாளையம் என்ற பகுதியில் தனியார் மண்டபத்தில் வெஸ்ட் புனோகோசி ஷெட்டோகான் கரேத்தா சவுத் இந்தியா சார்பில் மாநில அளவிலான கரரேத்தா போட்டிகள் நடைபெற்றது . காலை துவங்கி மாலை வரை பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த கரேத்தா போட்டியில், ஏராளமான குழந்தைகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வில் முன்னாள் மின்துறை அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி அவர்கள் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது பள்ளிபாளையம் நகர அதிமுக செயலாளர் பி.எஸ்.வெள்ளியங்கிரி , தெற்கு ஒன்றிய செயலாளர் சேர்மன் செந்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் என பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்..நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆனந்த் செய்திருந்தார்.
Next Story