காவிரி ஆற்றில் தற்கொலைக்கு முயன்ற பெண் பத்திரமாக மீட்பு

காவிரி ஆற்றில் தற்கொலைக்கு முயன்ற பெண் பத்திரமாக மீட்பு
குடும்ப பிரச்சினையால் காவிரி ஆற்றில் குதிக்க முயன்ற பெண்ணை அவ்வழியே சென்றவர்கள் பத்திரமாக மீட்டனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஈரோட்டை இணைக்கும் வகையில் காவிரி ஆறு உள்ளது. இந்நிலையில் காவிரி ஆற்றுப் பாலத்தின் மேலே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பள்ளிபாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் நீண்ட நேரமாக ஆற்றைப் பார்த்த வாரே நின்று கொண்டிருந்தார். திடீரென பாலத்தின் கைப்பிடி சுவர் மேலே ஏறி நின்று ஆற்றில் குதிக்க முயற்சி செய்தார். இதனைக் கண்டு அவ்வழியே சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் உடனடியாக கைப்பிடி சுவர் மேலே ஏறி இருந்த அந்தப் பெண்ணை மடக்கிப்பிடித்து கீழே இறக்கினர். இது குறித்த தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர் குடும்ப பிரச்சனை காரணமாக காவிரி ஆற்றில் குதிக்க முயன்றாரா!?? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த சம்பவத்தால் காவிரி ஆற்று பாலத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story