புற்று மாரியம்மன் கோவில் சாகை வார்த்தல் உற்சவம்

புற்று மாரியம்மன் கோவில் சாகை வார்த்தல் உற்சவம்
உற்சவம்
அரகண்டநல்லுார் புற்றுமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் உற்சவத்தையொட்டி, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அரகண்டநல்லுார், கொட்டாமேடு, தென்பெண்ணை ஆற்றையொட்டி அமைந்திருக்கும் புத்துமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் ஆண்டு பெருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 11:00 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டது. பக்தர்கள் கூழ் குடம் எடுத்து வந்து மணிலா மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் இருக்கும் முத்து மாரியம்மனுக்கு படையலிட்டனர். பின், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் இருக்கும் புத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரத்துடன் சாகை வார்த்தல் உற்சவம் நடந்தது. இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
Next Story