பாவேந்தர் பேரவை பாராட்டு விழா

பாவேந்தர் பேரவை பாராட்டு விழா
விழா
பாவேந்தர் பேரவை சார்பில் திருக்கோவிலுாரில் நடந்த விழாவில் அரிமா சங்க மதிவாணனுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழுப்புரம் பாவேந்தர் பேரவையின் சார்பில், திருக்கோவிலுார் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் விருது பெற்றவர்களை கவுரவிக்கும் விழா நடந்தது. பேரவை தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குரு ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். செயலாளர் ரத்தினசாமி வரவேற்றார். அரிமா சங்க மாவட்ட தலைவர் பால்ஆரோக்கியராஜ் விருந்தினர்களை சிறப்பித்தார். அரிமா மாவட்ட தலைவர் மதிவாணன் பல்வேறு சேவை திட்டங்கள் புரிந்ததற்காக அவருக்கு 'பல்கலை வித்தகர்' விருது பேரவை சார்பில், வழங்கப்பட்டது. அரிமா சங்கத் தலைவர் ஜனசக்தி, ராஜேந்திரன், நிர்வாகிகள் காசி விஸ்வநாதன், சண்முகம், சத்திய நாராயணன், ராமகிருஷ்ண ரமணன், உஷாராணி, சம்பத் வாழ்த்துரை வழங்கினர். விருது பெற்ற மதிவாணன் ஏற்புரையாற்றினார். அரிமா சங்க பொருளாளர் ராஜேஸ்வரி, உறுப்பினர்கள் மஞ்சுளா, ஜானகிராமன் உட்பட பலர் பங்கேற்றனர். பேரவை பொதுச் செயலாளர் உலகதுரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பேரவை உறுப்பினர் அரங்கபத்மநாபன் நன்றி கூறினார்.
Next Story