அழகியநாச்சியம்மன் கோயில் ஆடித தேரோட்டம்!

அழகியநாச்சியம்மன் கோயில் ஆடித தேரோட்டம்!
பக்தி
பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில் ஆடித தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆடித் தேரோட்டவிழ ஆக. 4-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் சிறப்பு வழிபாடு மற்றும் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட ம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.முன்னதாக, சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப்பிறகு அம்மன் தேரில் எழுந்தருளினார். பிறகு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல்துறையின மற்றும் தீயணைப்புத்துறையினர் செய்திருந்தனர்.
Next Story