புதுக்கோட்டையில் மாணவர்கள் இடையே மோதல்!
Pudukkottai King 24x7 |14 Aug 2024 3:33 AM GMT
குற்றச்செய்திகள்
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழ மாலை பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. புதுக்கோட்டை நகரிலுள்ள பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவர் ஒருவருக்கும், அதே பள்ளியில் பிளஸ்1 பயிலும் மாணவர்கள் சிலருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை மாலை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வகுப்பு முடிந்து வெளியே வந்த மாணவர் ஒருவரை, ஒரு கும்பல் அடித்து வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்த தகவலறிந்த கணேஷ்நகர் போலீஸாரும், பள்ளி ஆசிரியர்களும் விரைந்து செயல்பட்டு மாணவரை மீட்டதுடன், தகராறில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு வரவழைத்தனர். அங்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் உள்ளிட்டோர் மாணவர்களிடம் இதுபோன்ற நடவடிக்கைகளில் இனிமேல் ஈடுபட மாட்டோம் என எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
Next Story