புதுக்கோட்டையில் ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்!
Pudukkottai King 24x7 |14 Aug 2024 5:43 AM GMT
நிகழ்வுகள்
புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பணி ஓய்வு பெறும் நாளில் பணி நீக்கம் செய்யக்கூடாது என்ற அரசாணையை முறையாக பயன்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் இளநிலை பொறியாளர்களுக்கும் உதவி பொறியாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story