சங்ககிரி அருகே சாலை விரிவாக்க பணி வெட்டி சாய்த்த பனை மரங்கள் !

சங்ககிரி:சாலை விரிவாக்க பணி வெட்டி சாய்த்த பனை மரங்கள் சமூக ஆர்வலர்கள் விடுத்த கோரிக்கை....
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தண்ணீர் தாசனூர் பகுதியில் சாலை விரிவாக்க பணி... சாலையோரமாக இருந்த பனைமரங்கள் வெட்டி சாய்ப்பு... சமூக ஆர்வலர்கள் வேதனை... சேலம் மாவட்டம் எடப்பாடியிலிருந்து கல்வடங்கம் செல்லும் பிரதான சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணியின் போது தண்ணீர்தாசனூர் பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த 4 பனை மரங்களை அனுமதியின்றி வேரோடு வெட்டி சாய்த்து விட்டதாக கூறப்படுகிறது . எனவே, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story