தனியார் பள்ளியில் புதிதாக இன்ட்ராக்ட் கிளப் தொடக்க விழா

தனியார் பள்ளியில் புதிதாக இன்ட்ராக்ட் கிளப்  தொடக்க விழா
விழா
சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் புதிதாக இன்ட்ராக்ட் கிளப் தொடக்க விழா மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர் பகுதியில் அமைந்துள்ள ,ஸ்ரீ சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் ரோட்டரி குழுமத்தின் இன்ட்ராக்ட்(INTERACT CLUB) கிளப் தொடங்கும் நிகழ்ச்சியானது இன்று சாரதாஸ்ரீ வித்யாஷ்ரம் பள்ளியின் தலைவர் S.கார்த்திகேயன், சங்கத்தின் தலைவர் M.செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட துணை ஆளுநர் ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இன்ட்ராக்ட்(INTERACT CLUB) கிளப் தலைவர், செயலாளர்,பொருளாளர் உள்ளிட்டோருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் பள்ளி முதல்வர் ஷீபா பிராங்கிளின் , ரோட்டரி சங்கத்தின் சாசன தலைவர் எஸ்.எஸ்.வாசன், சங்கச் செயலாளர் M.S.கோதம்சந்த, பொருளாளர் சௌந்தரராஜன், உறுப்பினர்கள் முத்துக்குமாரசாமி, கல்யாண் குமார், S.ராஜேஷ்குமார், வழக்கறிஞர் H.ராஜேஷ் ஆர்சிசி குழு நிர்வாகிகள் சிதம்பரநாதன்,ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்நிகழ்வின் இறுதியாக பள்ளி வளாகத்தினுள் மரக்கன்று நடப்பட்டது.
Next Story