நலத்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

நலத்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நலத்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், காடச்சநல்லூர், பள்ளிபாளையம் அக்ரகாரம், பல்லக்காபாளையம் தட்டாங்குட்டை குப்பாண்டபாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் ஒரு கோடியே 33 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, வடிகால், கான்கிரீட் தளம், மேல்நிலை நீர் தேக்க தொட்டி, கழிப்பிடம் அமைத்தல் மற்றும் மூடுகல் அமைத்தல் உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்கான பூமி பூஜையில் முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story