பல்லாங்குழி சாலை சீரமைக்க கோரிக்கை!
Pudukkottai King 24x7 |15 Aug 2024 4:33 AM GMT
பொது பிரச்சனைகள்
கறம்பக்குடி ஒன்றியம் பிலாவிடுதி ஊராட்சியை சேர்ந்தது வெள்ளாள கொல்லை கிராமம். இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு பணிகளுக்கும், பொருட்கள் வாங்கவும் கறம்பக்குடிக்கு வர வேண்டும். வெள்ளாள கொல்லை மட்டுமின்றி பட்டமாவிடுதி, கூத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்களும் இந்த சாலையைதான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழயுமாக காணப்படுகிறது. இப்போது மழை பெய்து வருவதால் சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதுபற்றி மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. சாலையை உடனடியாக சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story