எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை

எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை
78வது சுதந்திர தினத்தில்  எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் தேசிய கொடியை ஏற்றிவைத்து மொழிப்போர் மற்றும் சுதந்திர தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.
78 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாரத்தில் உள்.ள அரசு அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.  தொடர்ந்து. சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் DSM.பாஷா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மூத்த மொழிப்போர் தியாகிகள் மற்றும் சுதந்திர தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. அப்போது  நகராட்சி அலுவலர்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story